ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவி நியமனங்களுக்கு செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் புதிய தவிசாளராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், உப தலைவராக அகிலவிராஜ் காரியவசமும், பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் பொதுச்செயலாலளராக பாலித்த ரங்கே பண்டாரவும், பொருளாளராக ஏ.எஸ்.எம்.மிஸ்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை